search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் படேல் கைது - பாஜக மாநில அரசை தவறாக பயன்படுத்துகிறது என காங். குற்றச்சாட்டு
    X

    ஹர்திக் படேல் கைது - பாஜக மாநில அரசை தவறாக பயன்படுத்துகிறது என காங். குற்றச்சாட்டு

    குஜராத்தில் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #HardikPatel
    அகமதாபாத்:

    கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். அப்போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

    இதுதொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.#HardikPatel

    இதுதொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டே கூறுகையில், குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களின் குரல்களை அடக்க நினைக்கிறது. மேலும், மாநில அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். #HardikPatel
    Next Story
    ×