search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடை
    X

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடை

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #PChidambaram #INXmediacase
    Next Story
    ×