search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
    X

    சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிராநகர் சர்வதேச எல்லை பகுதியில் உள்ள போபியா அருகே இன்று காலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருநபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளார். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதையும் மீறி அவர் முன்னேறி வந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர். 
    Next Story
    ×