search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் நேற்றிரவு கடத்தப்பட்ட போலீஸ்காரர் பிரேதமாக கண்டெடுப்பு
    X

    காஷ்மீரில் நேற்றிரவு கடத்தப்பட்ட போலீஸ்காரர் பிரேதமாக கண்டெடுப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு கடத்தப்பட்டபோலீஸ்காரரின் குண்டுகள் துளைத்த உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. #bulletriddledbody #policeconstableMohdSalim
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர், சலீம் ஷா. குல்காம் மாவட்டத்துக்குட்பட்ட முட்டல்ஹாமா பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

    நேற்றிரவு, சலீம் ஷாவின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அவரை கடத்திச் சென்றனர்.

    இம்மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் காவல் துறையினர் சில நாட்களுக்கு பின்னர் பிணங்களாக கண்டெடுக்கப்படுவதால் கான்ஸ்டபிள் சலீம் ஷா கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து சலீம் ஷாவை விடுவிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கைமோகத் பகுதியில் துப்பாக்கிகளால் துளைக்கப்பட்ட  சலீம் ஷாவின் பிரேதத்தை பாதுகாப்பு படையினர் இன்று மாலை கண்டெடுத்துள்ளனர். #bulletriddledbody #policeconstableMohdSalim
    Next Story
    ×