search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
    X

    டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.
    புதுடெல்லி:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.



    அதில், “ஈரானில் பணிபுரியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக பணியில் இருந்து நீக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் கொடுமை இழைத்து வருகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட 21 மீனவர்களையும் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்ததாக கனிமொழி எம்.பி. அலுவலகம் தெரிவித்து உள்ளது. 
    Next Story
    ×