என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் மிரட்டல் - ஈரான் உடனான இந்தியாவின் உறவு குறித்து மத்திய மந்திரி விளக்கம்
Byமாலை மலர்19 July 2018 12:07 PM GMT (Updated: 19 July 2018 12:07 PM GMT)
ஈரான் உடனான உறவை துண்டிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு இணை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். #MansoonSession #VKSingh
புதுடெல்லி:
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிடில் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.
சவூதி, ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிகாவின் எச்சரிக்கை இந்தியா, சீனா என பல நாடுகளுக்கும் பொருந்தும் நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-
ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
என அவர் பேசினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X