search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
    X

    நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு - அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

    நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #MonsoonSession #NEET #NEETExamCentres
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு எழுதுவதற்காக வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார்.



    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இனி நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இனி, தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். #MonsoonSession #NEET #NEETExamCentres
    Next Story
    ×