search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்
    X

    தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். #WomanNaxalkilled #Chhattigsarhencounter
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக இந்தோ-திபெத்திய எல்லைப்படை மற்றும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.



    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்ட்கவுன் மாவட்டத்தில்  இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ஜரினா என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொன்டான் மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குள்ளும் அருகாமையில் உள்ள சில கிராமங்களிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த பகுதியை பாதுகாப்பு படையினர்  சுற்றிவளைத்தனர். அவர்களை கண்டதும் மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 16 குற்றவழக்குகளில் தேடப்பட்டுவந்த ஜரினா என்ற பெண் நக்சலைட் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜரினாவின் தலைக்கு போலீசார் 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #WomanNaxalkilled  #Chhattigsarhencounter

    Next Story
    ×