search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் ரூ.54 கோடி இழப்பு - மக்களவையில் மந்திரி தகவல்
    X

    நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் ரூ.54 கோடி இழப்பு - மக்களவையில் மந்திரி தகவல்

    நீலகிரி மலை ரெயிலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில்வேக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    புதுடெல்லி:

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    Next Story
    ×