என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சிக்கு 51 உறுப்பினர்களுடன் புதிய காரிய கமிட்டி - ராகுல் அறிவிப்பு
Byமாலை மலர்17 July 2018 2:19 PM GMT (Updated: 17 July 2018 2:19 PM GMT)
51 உறுப்பினர்களுடன் புதிதாக இன்று உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு தேசிய அளவில் மூத்த தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்கு மாற்றாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி இன்று அமைத்துள்ளார்.
இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதில் மூத்தவர்கள், இளைய தலைமுறையினர் அடங்கிய கமிட்டியாக இது அமைந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi #CongressWorkingCommittee
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு தேசிய அளவில் மூத்த தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்கு மாற்றாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி இன்று அமைத்துள்ளார்.
இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வயதில் மூத்தவர்கள், இளைய தலைமுறையினர் அடங்கிய கமிட்டியாக இது அமைந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi #CongressWorkingCommittee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X