search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தியின் பூர்வீகத்தை கிண்டல் செய்த தலைவர் நீக்கம் - மாயாவதி அதிரடி
    X

    ராகுல்காந்தியின் பூர்வீகத்தை கிண்டல் செய்த தலைவர் நீக்கம் - மாயாவதி அதிரடி

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பூர்வீகம் குறித்து கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத்தலைவரை பதவிநீக்கம் செய்து மாயாவதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். #Mayawati
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவராக சமீபத்தில் ஜெய் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டார். நேற்று கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெய் பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் ஒருபோதும் ராகுல்காந்தியால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சி தலைவரின் பூர்வீகம் குறித்து அவதூறாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அதனால், அவரை தேசிய துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், ஜெய் பிரகாஷ் சிங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Mayawati
    Next Story
    ×