search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் ஒழுங்காக பணி செய்யாத காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்மந்திரி
    X

    உ.பி.யில் ஒழுங்காக பணி செய்யாத காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்மந்திரி

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முறையாக பணி செய்யாத 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UttarPradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மற்றும் பிரதாப்கர் பகுதியில் காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் பரத்வாஜ், சந்தோஷ் குமார் சிங் ஆகிய இருவரும் ஒழுங்காக பணி செய்வது இல்லை எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு  டி.ஜி.பி ஓ.பி.சிங் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அந்த இரண்டு காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு பதிலாக சம்பால் பகுதியில் யமுனா பிரசாத்தையும், மற்றும் பிரதாப்கர் பகுதிக்கு தேவ் ரஞ்சன் வெர்மாவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 அதிகாரிகளும், அவர்களது பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. #UttarPradesh #YogiAdityanath
    Next Story
    ×