என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினர் ஆதரவை நாடும் அரசு
Byமாலை மலர்16 July 2018 3:09 PM GMT (Updated: 16 July 2018 3:09 PM GMT)
பாராளுமன்ற செயல்பாடுகள் கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை மந்திரி விஜய் கோயல் சந்தித்து வருகிறார். #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.
இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி விஜய் கோயல் தற்போது சந்தித்து வருகிறார்.
சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற தலைவர் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற தலைவர் சத்திஷ் சந்திரா மிஸ்ரா, சிவசேனா பாராளுமன்ற தலைவர் சஞ்சய் ரவுத், இந்ஹ்டிய கன்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா மற்றும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்த விஜய் கோயல், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை இடையூறுகள் ஏதுமின்றி நல்லமுறையில் செயல்பட ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டார்.
பாராளுமன்றத்தின் பணிகள் உரியமுறையில் நிறைவேற்றப்பட வேண்டியது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தேசிய கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்த விஜய் கோயல், பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மத்திய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X