search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் பெண்ணை கற்பழித்து கோவில் வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்த கொடூரம்
    X

    உ.பி.யில் பெண்ணை கற்பழித்து கோவில் வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்த கொடூரம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, அவரை கோவில் வளாத்தில் உயிருடன் எரித்து கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. #Uttarpradesh
    லக்னோ:

    இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆய்வுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் நடக்கிறது.

    இதனை தடுக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படவில்லை.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தனது மகளுடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.



    இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலின் வளாகத்தில் பூஜைக்காக போடப்பட்டிருந்த குடிசைக்கு அந்த பெண்ணை கொண்டு சென்ற அந்த 5 பேரும், அவரை உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.

    இந்த சமபவம் தொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Uttarpradesh
    Next Story
    ×