என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கீதம் உருவான மண்ணை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தும் மாநில அரசு - மோடி குற்றச்சாட்டு
Byமாலை மலர்16 July 2018 9:46 AM GMT (Updated: 16 July 2018 9:46 AM GMT)
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கீதம் உருவான மாநிலத்தை ஆளும் அரசு வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். #Modi #WestBengal
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய மோடி, மேற்கு வங்க மாநிலத்தில், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றகூட அனுமதி பெற வேண்டி இருப்பதாகவும், கோவிலில் பூஜை செய்யக்கூட அரசு அனுமதி பெற வேண்டிய நிலை இங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பல்வேறு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியால் மாநிலத்தில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலமானது தேசிய கீதம் உருவான புனிதமான மண் எனவும், அதனை வாக்குவங்கிக்காக மட்டுமே ஆளும் மாநில அரசு பயன்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளும் அரசு எதிரிகளை கொலை செய்வதையே மும்முரம் காட்டிவருவதாகவும், அதன் முகத்தை இப்போது அறிந்துகொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், மக்களுக்கு அநியாயம் செய்யும் இந்த அரசு ஆட்சியில் இருப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், வாக்கு வங்கியை குறிவைத்தே செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தவே உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். #Modi #WestBengal
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய மோடி, மேற்கு வங்க மாநிலத்தில், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றகூட அனுமதி பெற வேண்டி இருப்பதாகவும், கோவிலில் பூஜை செய்யக்கூட அரசு அனுமதி பெற வேண்டிய நிலை இங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பல்வேறு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியால் மாநிலத்தில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலமானது தேசிய கீதம் உருவான புனிதமான மண் எனவும், அதனை வாக்குவங்கிக்காக மட்டுமே ஆளும் மாநில அரசு பயன்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளும் அரசு எதிரிகளை கொலை செய்வதையே மும்முரம் காட்டிவருவதாகவும், அதன் முகத்தை இப்போது அறிந்துகொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், மக்களுக்கு அநியாயம் செய்யும் இந்த அரசு ஆட்சியில் இருப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், வாக்கு வங்கியை குறிவைத்தே செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தவே உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். #Modi #WestBengal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X