search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் படுகாயம்
    X

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் படுகாயம்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அக்னூர் என்ற இடத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உதாம்பூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    எல்லைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் படுகாயம் அடைவது இது 2-வது தடவை ஆகும். கடந்த 7-ந் தேதி இதே மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  #tamilnews 
    Next Story
    ×