என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற மேல்சபைக்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி
Byமாலை மலர்14 July 2018 9:10 AM GMT (Updated: 14 July 2018 9:10 AM GMT)
பாராளுமன்ற மேல்சபையில் காலியாக இருந்த பதவிகளில் 4 உறுப்பினர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். #RamShakal #4nominatedtoRajyaSabha
புதுடெல்லி:
அவ்வகையில், காலியாக இருந்த பதவிகளில் 4 உறுப்பினர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தலித் இனத்தவரும் விவசாயிகள் சங்க தலைவருமான ராம் ஷகல், ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மோதிலால் நேரு கல்லூரி பேராசிரியருமான ராகேஷ் சின்ஹா ஆகியோர் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராம் ஷகல் ஏற்கனவே பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றியவராவார்.
மேலும், கற்சிற்பக்கலை வல்லுனரான ரகுநாத் மோஹாபத்ரா, பிரபல நாட்டியக் கலைஞரும் நடனக் கலை ஆசிரியையுமான சோனால் மான்சிங் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரகுநாத் மோஹாபத்ரா பூரி ஜகநாதர் ஆலயத்தின் பழங்கால சிற்பங்களை பொலிவூட்ட அரும்பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சூரியக் கடவுளின் சிலை மற்றும் பாரிஸ் நகர புத்த ஆலயத்தில் உள்ள மரத்திலான புத்தர் சிலையையும் வடித்ததுடன் சுமார் 2 ஆயிரம் சிற்பக்கலை மாணவர்களையும் உருவாக்கியுள்ளார்.
சமூகச் சேவகியும், பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நாட்டிய கலைஞருமான சோனால் மான்சிங் டெல்லியில் இந்திய பாரம்பரிய நாட்டிய கலை பள்ளி ஒன்றை பலகாலமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RamShakal #4nominatedtoRajyaSabha
பாராளுமன்ற மேல்சபைக்கு மாநிலங்களை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நபர்களை தவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பிரபலங்களை ஜனாதிபதி நியமனம் செய்வது மரபாக உள்ளது.
அவ்வகையில், காலியாக இருந்த பதவிகளில் 4 உறுப்பினர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தலித் இனத்தவரும் விவசாயிகள் சங்க தலைவருமான ராம் ஷகல், ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மோதிலால் நேரு கல்லூரி பேராசிரியருமான ராகேஷ் சின்ஹா ஆகியோர் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராம் ஷகல் ஏற்கனவே பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றியவராவார்.
மேலும், கற்சிற்பக்கலை வல்லுனரான ரகுநாத் மோஹாபத்ரா, பிரபல நாட்டியக் கலைஞரும் நடனக் கலை ஆசிரியையுமான சோனால் மான்சிங் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரகுநாத் மோஹாபத்ரா பூரி ஜகநாதர் ஆலயத்தின் பழங்கால சிற்பங்களை பொலிவூட்ட அரும்பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சூரியக் கடவுளின் சிலை மற்றும் பாரிஸ் நகர புத்த ஆலயத்தில் உள்ள மரத்திலான புத்தர் சிலையையும் வடித்ததுடன் சுமார் 2 ஆயிரம் சிற்பக்கலை மாணவர்களையும் உருவாக்கியுள்ளார்.
சமூகச் சேவகியும், பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நாட்டிய கலைஞருமான சோனால் மான்சிங் டெல்லியில் இந்திய பாரம்பரிய நாட்டிய கலை பள்ளி ஒன்றை பலகாலமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RamShakal #4nominatedtoRajyaSabha
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X