search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்கள் - பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரசார வியூகம்
    X

    100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்கள் - பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரசார வியூகம்

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக நாடு முழுவதும் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. #pmmodi #parliamentelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    சமீபத்தில் சென்னை வந்த அவர் சுமார் 16 ஆயிரம் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இன்று தெலுங்கானா மாநிலத்தில் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் 400 பாராளுமன்ற தொகுதிகளிலாவது கட்சியினரை தயார்நிலையில் வைத்திருக்கும் திட்டத்தில் இதுவரை சுமார் 200 தொகுதிகளில் இதற்கான பணிகள் முடிந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த 50 பொதுக்கூட்டங்கள் மூலமாக 100 முதல் 150 பாராளுமன்ற தொகுதிகளில் வாழும் வாக்காளர்களை கவர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலும் சில பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன,

    இதன் முதல்கட்டமாக நேற்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, நாளையும், நாளை மறுநாளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அசாம்கர், வாரணாசி, மிர்சாப்பூர் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ஷாஜஹான்பூர் பகுதியில் விரைவில் பேசவுள்ளார். #pmmodi #parliamentelection 
    Next Story
    ×