என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் - ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
Byமாலை மலர்12 July 2018 12:45 PM GMT (Updated: 12 July 2018 12:45 PM GMT)
டெல்லியில் திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. #SupremeCourt #DelhiGovernor
புதுடெல்லி:
டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அதில் டெல்லியில் மலை போல் குப்பைகள் குவிந்து இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மாநகராட்சி அதிகாரங்கள் மீது உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர் பணிகளை செய்யாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக ஆளுநர் அனில் பைஜால் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் வேலை என்றும் அதனை கண்காணிப்பது மட்டுமே எனது வேலை எனவும் குறிப்பிட்டுருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், குப்பையை அகற்றுவது முதல்மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #DelhiGovernor
டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அதில் டெல்லியில் மலை போல் குப்பைகள் குவிந்து இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மாநகராட்சி அதிகாரங்கள் மீது உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர் பணிகளை செய்யாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக ஆளுநர் அனில் பைஜால் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் வேலை என்றும் அதனை கண்காணிப்பது மட்டுமே எனது வேலை எனவும் குறிப்பிட்டுருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், குப்பையை அகற்றுவது முதல்மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #DelhiGovernor
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X