என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா
Byமாலை மலர்9 July 2018 9:37 PM GMT (Updated: 9 July 2018 9:37 PM GMT)
இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், இரண்டு பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா நேற்று விண்ணில் செலுத்தியுள்ளது. #Pakistan #SpySatellitt #China
புதுடெல்லி:
பாகிஸ்தானுக்காக இரு செயற்கைக் கோள்களை சீனா நேற்று விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனா மார்ச்- 2 சி ராக்கெட்டை நேற்று முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் சர்வதேச செயற்கைக் கோள்களை சீன ராக்கெட்டுகள் வர்த்தக ரீதியில் சுமந்து சென்று விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.
வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 11.56 மணிக்கு சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட், பாகிஸ்தானுக்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.
இந்த இரு செயற்கைக் கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்' வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.
பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Pakistan #SpySatellites #China
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X