என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. மேல்முறையீடு- ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Byமாலை மலர்9 July 2018 6:07 AM GMT (Updated: 9 July 2018 6:07 AM GMT)
தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க. கொறடா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #MLAsDisqualification #DMKAppeal
புதுடெல்லி:
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு தனது தலைமையிலான அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு 4 வாரங்களக்குள் பதில் அளிக்கும்படி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். #MLAsDisqualification #DMKAppeal
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு தனது தலைமையிலான அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் ஓ.பி.எஸ். தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு 4 வாரங்களக்குள் பதில் அளிக்கும்படி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். #MLAsDisqualification #DMKAppeal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X