search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து
    X

    காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Kashmir #MobileIinternet
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹவூரா ரேட்வானி கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து, அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் அங்குள்ள வீடுகளில் சோதனை செய்தனர்.
    அவர்களை அனுமதிக்க மறுத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படை மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்ட்லீப் என்ற இளம்பெண், இர்ஷாத் மற்றும் ஷாகிர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #MobileIinternet
    Next Story
    ×