என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து
Byமாலை மலர்7 July 2018 7:18 PM GMT (Updated: 7 July 2018 7:18 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Kashmir #MobileIinternet
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹவூரா ரேட்வானி கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் அங்குள்ள வீடுகளில் சோதனை செய்தனர்.
அவர்களை அனுமதிக்க மறுத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படை மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்ட்லீப் என்ற இளம்பெண், இர்ஷாத் மற்றும் ஷாகிர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, அங்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #MobileIinternet
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X