search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வீடு தேடி செல்லும் ரேஷன் பொருட்கள் - திட்டத்தை விரைவுப்படுத்த கெஜ்ரிவால் உத்தரவு
    X

    டெல்லியில் வீடு தேடி செல்லும் ரேஷன் பொருட்கள் - திட்டத்தை விரைவுப்படுத்த கெஜ்ரிவால் உத்தரவு

    தலைநகர் டெல்லியில் மக்களின் இல்லங்களை தேடி சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை விரைவுப்படுத்துமாறு முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #Kejriwalapproval #rationsdoorstepdelivery
    புதுடெல்லி:

    டெல்லி அரசில் அதிக அதிகாரம் படைத்தவர் யார்? என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவர் என்ற முறையில் முதல் மந்திரி தலைமையிலான மந்திரிசபைக்கு தான் அதிக அதிகாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மந்திரிசபையால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடைக்கல்லாகவும், இடையூறாகவும் கவர்னர் இயங்க முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, கவர்னரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்த அரசு உயரதிகாரிகள் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, அவருடன் இணைந்தும் இணக்கமாகவும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி அரசின் செலவினங்களுக்கான நிதிக்குழு கூட்டம் இன்று துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது டெல்லியில் கட்டப்பட்டு வரும் சிக்னச்சர் பிரிட்ஜ் என்னும் மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை முடிக்கவும், டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் தங்கும் வகையில் 3 புதிய விடுதிகளை கட்டவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லியில் மக்களின் இல்லங்களை தேடி சென்று ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்துக்கு எதிரான தடைக்கற்களை தகர்த்தெறிந்து, அந்த திட்டத்தை விரைவுப்படுத்துமாறு உணவுப்பொருள் மற்றும் பொது வினியோகத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த அன்றாட நடவடிக்கைகள் பற்றி தனக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #Kejriwalapproval  #rationsdoorstepdelivery
    Next Story
    ×