என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் கொலை வழக்கில் சி.பி.எம். கட்சியினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்6 July 2018 7:28 AM GMT (Updated: 6 July 2018 7:28 AM GMT)
கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. கட்சியில் இணைந்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X