search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் - ஹில்சா மலைப்பகுதியில் இருந்து மேலும் 275 இந்தியர்கள் மீட்பு
    X

    நேபாளம் - ஹில்சா மலைப்பகுதியில் இருந்து மேலும் 275 இந்தியர்கள் மீட்பு

    மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய மேலும் 275 இந்தியர்கள் நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    காத்மண்டு:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஹில்சா பகுதியில் சிக்கித் தவித்த இந்திய பக்தர்கள் மேலும் 275 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இது தொடர்பாக நேபாள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய பக்தர்கள் 675 பேர் ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த 3 நாள்களில், மீட்புப் பணியில் 53 சிறிய விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் 142 முறை ஈடுபடுத்தப்பட்டது. ஹில்சா, சிமிகோட்டுக்கு இடையே தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது என் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    Next Story
    ×