என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவில் விவகாரம் குறித்து அடுத்த வாரம் மனு தாக்கல் - சுப்பிரமணியன் சுவாமி
Byமாலை மலர்3 July 2018 9:58 PM GMT (Updated: 3 July 2018 9:58 PM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவில் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். #SubramanianSwamy #TirupatiTemple
புதுடெல்லி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை குருக்கள் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ரமண தீட்சிதர், திருப்பதி கோவிலில் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், ராஜ பரம்பரையினர் சுவாமிக்கு வழங்கிய 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணவில்லை. சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆகம விதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் யமுனாவை சுத்தப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் பொதுநல மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார். #SubramanianSwamy #TirupatiTemple
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X