search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு
    X

    பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு

    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்று சர்ச் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி.யை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaPriests
    Next Story
    ×