search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதற்காக மகளை கொன்ற தந்தை - ஆந்திராவில் கொடூரம்
    X

    செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதற்காக மகளை கொன்ற தந்தை - ஆந்திராவில் கொடூரம்

    ஆந்திர மாநிலத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதற்காக பெற்ற மகளையே தந்தை கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. #AndhraPradesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் தொடராவுலப்பாடு பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சந்திரிகா. இவர் தனது கல்லூரி நண்பர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரிகா, தனது காதலருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தந்தை ஆத்திரமடைந்து சந்திரிகாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இதனால் சந்திரிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் சந்திரிகாவின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். காதலருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து தந்தையே தன் மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh
    Next Story
    ×