என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு
Byமாலை மலர்25 Jun 2018 10:08 AM GMT (Updated: 25 Jun 2018 10:08 AM GMT)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.
இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X