search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு
    X

    கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

    இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    Next Story
    ×