என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்று கடலுக்கு பலியான வாலிபர் - காக்கிநாடாவில் சோகம்
Byமாலை மலர்24 Jun 2018 2:54 PM GMT (Updated: 24 Jun 2018 2:54 PM GMT)
ஆந்திர மாநிலம், காக்கிநாடா கடற்கரையில் இன்று கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Mandrowns #Kakinadabeach
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் உள்ள கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானவர்கள் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பேரலையில் சிக்கிய சிறுவன் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதை பார்த்த ஒரு வாலிபர் நீருக்குள் பாய்ந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவர் சிறுவனை சென்றடைவதற்குள் அடுத்தடுத்து வந்த பெரிய அலைகள் அந்த வாலிபரை சுருட்டி, கடலுக்குள் கொண்டு சென்றது.
இதைகண்ட வேறு சிலர் கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால், அவனை காப்பாற்ற முயன்று உயிர் தியாகம் செய்த வக்கலப்புடி பகுதியை சேர்ந்த பூலோகம்(27) என்பவரின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Mandrowns #Kakinadabeach
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X