search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்
    X

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்

    தலைமை நீதிபதி மீது புகார் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார். #JusticeChelameswar #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.

    கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.



    நீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. #JusticeChelameswar #SC
    Next Story
    ×