search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் - தற்கொலை கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
    X

    மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் - தற்கொலை கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

    உலக கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.


    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×