search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சைக்காக பெங்களூரு சென்றடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    சிகிச்சைக்காக பெங்களூரு சென்றடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

    உடல்நலக் குறைவால் டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை ரத்துசெய்திருந்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக இன்று பெங்களூரு சென்றடைந்தார். #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
    பெங்களூரு :

    டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 19-ம் தேதி தனது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டார்.

    கவர்னரின் அறிவுறுத்தலின்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 9 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கெஜ்ரிவாலின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளதால் இயன்முறை (நேச்சுரோபதி) சிகிச்சை பெருவதற்காக, அவர் இன்று பெங்களூரு வந்தடைந்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு கெஜ்ரிவால் பெங்களூருவில் தங்கியிருந்து சிகிச்சை பெருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
    Next Story
    ×