search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரப்பிரதேசத்தை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்
    X

    ஆந்திரப்பிரதேசத்தை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

    ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக் தங்கள் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus

    புவனேஷ்வர்:

    தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக்கொண்டது. 
     
    ஆந்திரா மாநிலத்திற்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில்,  தற்போது ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
     
    அந்த கடிதத்தில், இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus
    Next Story
    ×