search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்- தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின் கமல் பேட்டி
    X

    எங்கள் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்- தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின் கமல் பேட்டி

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalParty #MakkalNeedhiMaiam
    புதுடெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை.


    இந்நிலையில் தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி  நிர்வாகிகளுடன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

    பின்னர் வெளியே வந்த அவரிடம் கட்சியின் சின்னம், எதிர்கால செயல்பாடு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அவர்களுக்கு பதிலளித்த கமல், தற்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    சேலத்தில் அமைய உள்ள பசுமை வழித்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். #KamalPolitics #KamalParty #MakkalNeedhiMaiam
    Next Story
    ×