search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொன்று குளியல் அறைக்கு அடியில் புதைத்த கணவர்
    X

    மனைவியை கொன்று குளியல் அறைக்கு அடியில் புதைத்த கணவர்

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை கொன்று குளியல் அறைக்கு அடியில் புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    மைசூர்:

    ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் வெங்கம் பேட்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் நரசய்யா. இவரது மனைவி ரவணம்மா. இவர்களுக்கு திருமணமாகி 28 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளன.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நரசய்யா மனைவியை சரமாரியாக தாக்கியதில் அவர் பலியானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நரசய்யா மனைவி பிணத்தை வீட்டுக்குள் குளியல் அறையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டார்.

    குழந்தைகளும் அக்கம் பக்கத்தினரும் கேட்டபோது ரவணம்மா தன்னுடன் சண்டை போட்டதாகவும், கோபித்துக் கொண்டு காணாமல் போய் விட்டதாகவும் கூறி நாடகம் ஆடினார். போலீசிலும், உறவினர்களிடமும் இதையே தெரிவித்தார்.

    ஆனால் போலீசுக்கு கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை ரகசியமாக கண்காணித்தனர். பல மாதங்கள் ஆகியும் பதட்டத்துடனேயே காணப்பட்ட அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார்.

    8 மாதங்களுக்கு பின்பு நரசய்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் குளியல் அறையின் அடியில் புதைக்கப்பட்ட ரவணம்மா பிணத்தை போலீசார் தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    Next Story
    ×