search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் மனைவியின் தொகுதியில் போட்டியிடுகிறார் அகிலேஷ் யாதவ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் மனைவியின் தொகுதியில் போட்டியிடுகிறார் அகிலேஷ் யாதவ்

    அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று தெரிவித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    அம்மாநிலத்தின் கன்னாஜ் பாராளுமன்ற தொகுதியில் அகிலேஷ் யாதவும், மைன்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவும் போட்டியிட உள்ளனர். கன்னாஜ் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக அகிலேஷின் மனைவி டிம்பில் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AkhileshYadav
    Next Story
    ×