search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
    X

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×