search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்றாவது முனையமானது தாம்பரம் - நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத ரெயில் தொடக்கம்
    X

    மூன்றாவது முனையமானது தாம்பரம் - நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத ரெயில் தொடக்கம்

    சென்னை சென்டிரல், எழும்பூரை அடுத்து தாம்பரம் மூன்றாவது முனையமாக இன்று திறக்கப்பட்டதுடன், நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.

    மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.

    16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் எல்.இ.டி விளக்கு, செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதிகளை கொண்டிருக்கும். இன்று மட்டும் 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில், நாளை முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் ரெயில் மாலை 3.30 மணியளவில் நெல்லைக்கு சென்றடையும். வாரத்தில் திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரெயிலில் ரூ.240 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×