search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூரில் சர்வதேச போதை மருந்து கடத்தல் தலைவன் கைது
    X

    மணிப்பூரில் சர்வதேச போதை மருந்து கடத்தல் தலைவன் கைது

    மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் முகமது மாஸ்லே கைது செய்யப்பட்டார். #drugcartelKingpin #arrested
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலம் இம்பாலா நகரின் லிலாங் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மாஸ்லே. இவர் கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அண்டை நாடுகளான மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் போதை மருந்துகளை கடத்தி வருகிறார்.

    சர்வதேச அளவில் போதை மருந்து கடத்திய இவரை பல வருடங்களாக காவல்துறையினரும், போதை மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் தேடி வந்தனர்.

    இந்நிலையில், போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி பிருந்தா தலைமையில் லிலாங் பகுதியில் போதை மருந்து கடத்தும் கும்பலை பிடிக்க அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முகமது மாஸ்லே கைது செய்யப்பட்டார். போதை மருந்து கடத்தல் மற்றும் போலீசாரை தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகமது மாஸ்லேவை வரும் 11-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #drugcartelKingpin #arrested
    Next Story
    ×