search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
    X

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

    ஜம்மு-காஷ்மீரின் குப்வரா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். #JKencounter

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வரா மாவட்டத்தில் உள்ள ஹரில் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயமடைந்ததாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JKencounter 
    Next Story
    ×