என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசில் பதவி உயர்வு - இழுத்தடிக்கும் மோடிக்கு மாயாவதி கண்டனம்
Byமாலை மலர்6 Jun 2018 2:57 PM GMT (Updated: 6 Jun 2018 2:57 PM GMT)
மத்திய அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #Mayawati
லக்னோ :
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவை எடுத்தது. மேலும் இதற்கு முன்னரே, வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்திருந்தது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் இதுபற்றி ஆராய மத்திய அமைச்சர்கள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைபடி இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறி நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று கூறியதாவது :-
சுப்ரீம் கோர்ட் எப்போதும் மத்திய அரசுப்பணியிலும் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுகீடு அளிப்பதை ஆதரித்தே வந்துள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும் அவை பயனற்றது.
ஆனால், இதை நிறைவேற்றும் சட்ட மசோதா கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களவையில் நிலுவையில் இருந்துவருகிறது. இவ்வளவு காலம் இதை செயல்படுத்தாமல் மத்திய அரசு இருந்துவருவது வருந்தத்தக்க விஷயம் ஆகும். சட்டத்திருத்தற்கு தேவையான ஆதரவு இருந்தும் லோக்பால் சட்டத்தை போன்றே இதுவும் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது.
காங்கிரஸ் கட்சியை போலவே பாரதிய ஜனதா அரசும் விளம்பரம் தேடிக்கொள்வதிலேயே குறியாக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்கள் மற்றும் பிற்படுத்தபட்டவர்களுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி தலித் மக்களின் வாக்குகளை கவர பா.ஜ.கவினர் நினைக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Mayawati
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவை எடுத்தது. மேலும் இதற்கு முன்னரே, வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்திருந்தது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் இதுபற்றி ஆராய மத்திய அமைச்சர்கள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைபடி இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறி நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று கூறியதாவது :-
சுப்ரீம் கோர்ட் எப்போதும் மத்திய அரசுப்பணியிலும் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுகீடு அளிப்பதை ஆதரித்தே வந்துள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும் அவை பயனற்றது.
ஆனால், இதை நிறைவேற்றும் சட்ட மசோதா கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களவையில் நிலுவையில் இருந்துவருகிறது. இவ்வளவு காலம் இதை செயல்படுத்தாமல் மத்திய அரசு இருந்துவருவது வருந்தத்தக்க விஷயம் ஆகும். சட்டத்திருத்தற்கு தேவையான ஆதரவு இருந்தும் லோக்பால் சட்டத்தை போன்றே இதுவும் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது.
காங்கிரஸ் கட்சியை போலவே பாரதிய ஜனதா அரசும் விளம்பரம் தேடிக்கொள்வதிலேயே குறியாக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்கள் மற்றும் பிற்படுத்தபட்டவர்களுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி தலித் மக்களின் வாக்குகளை கவர பா.ஜ.கவினர் நினைக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Mayawati
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X