என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் - தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவு
Byமாலை மலர்31 May 2018 9:51 AM GMT (Updated: 31 May 2018 9:51 AM GMT)
விசாவில் குளறுபடி செய்து இந்தியாவில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய்லாந்து பெண்களை நாட்டை விட்டு வெளியேற போலீசார் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் பாபுஜி நகரில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் வைத்திருந்த விசா காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சிறப்பு படை போலீசார் கஜபதி நகர் பகுதியில் நடந்த சோதனையில் 3 பெண்களை மீட்டனர்.
விசா விதிகளில் குளறுபடிகள் இருப்பதன் காரணமாக, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டும் இதேபோல் 3 தாய்லாந்து பெண்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X