search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் - தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவு
    X

    இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் - தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவு

    விசாவில் குளறுபடி செய்து இந்தியாவில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய்லாந்து பெண்களை நாட்டை விட்டு வெளியேற போலீசார் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாபுஜி நகரில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த  பெண்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் வைத்திருந்த விசா காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சிறப்பு படை போலீசார் கஜபதி நகர் பகுதியில் நடந்த சோதனையில் 3 பெண்களை மீட்டனர்.

    விசா விதிகளில் குளறுபடிகள் இருப்பதன் காரணமாக, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.

    கடந்த ஆண்டும் இதேபோல் 3 தாய்லாந்து பெண்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×