search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசு 4 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது - காங்.
    X

    மோடி அரசு 4 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது - காங்.

    கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என காங்கிரஸ் கட்சி இன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. #4YearsOfModi #4YearsOfModiGovt
    புதுடெல்லி :  

    பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    இதை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அனைத்து மாநில தலைநகரங்களிலும் தலைவர்கள் அரசின் சாதனையை மக்களிடம் விளக்கி சொல்லும்படி கட்சி தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் “துரோகம்” என்ற புத்தகத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவருவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் அவினாஷ் பாண்டே, “மோடி தலைமையிலான பாஜக அரசில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.  2 கோடி புதிய வேளைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 4.16 லட்சம் வேலைவாய்ப்புகளையே உருவாக்கியுள்ளார்.

    நாட்டில் உள்ள சிறுபானமையினர், தலித் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இளைஞர்கள், விவசாயிகள்,  தொழிலதிபர்கள் அனைவரும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக உணர தொடங்கியுள்ளனர்.
     
    எனவே,  நாட்டு மக்களிடையே மோடி அரசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த ஆட்சிக்கு எதிரான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

    மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியை பற்றி கருத்து கூறிய காங்கிரஸ் மேலிட  தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக  ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை , ஒவ்வொருவரும் தினம்தோறும் தூக்கமற்ற இரவை கழித்து வருகின்றனர் என சாடியுள்ளார்.  

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் நாட்டிற்கு பெரும் தீங்கு, மோடி அரசின் 4 ஆண்டு கால ஆட்சியை  நம்பிக்கை துரோகம், தந்திரம், பழிவாங்குதல் மற்றும் பொய்கள் என 4 வார்த்தைகளில் வரையறுத்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.  #4YearsOfModi #4YearsOfModiGovt 

    Next Story
    ×