என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் கடனை கர்நாடக அரசு தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் - எடியூரப்பா
Byமாலை மலர்25 May 2018 2:28 PM GMT (Updated: 25 May 2018 2:28 PM GMT)
முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகள் கடனை 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் கர்நாடகாவில் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். #yeddyurappa #kumaraswamy
பெங்களூரு:
கர்நாடக மாநிலத் தேர்தலில் 77 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இன்று சட்டசபையில் இருந்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த எடியூரப்பா, விவசாயிகள் கடனை குமாரசாமி தலைமையிலான அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என தெரிவித்தார். #yeddyurappa #kumaraswamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X