என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்
Byமாலை மலர்24 May 2018 4:14 PM GMT (Updated: 24 May 2018 4:14 PM GMT)
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ளார். #VisvaBharati University #NarendraModi #MamataBanarjee
புதுடெல்லி :
வங்காளதேசம் விடுதலை போரின் போது இந்தியா மற்றும் வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேசம் பவன் என்ற பெயரில் புதிய ஆய்வகம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் சிந்திரி பகுதிக்கு பயணம் செய்யும் மோடி அங்கு அங்கு சிந்திரி உரம் தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை, தியோகர் விமான நிலைய விரிவாக்க திட்டம், பட்ராடு அனல் மின் நிலையம், ராஞ்சியில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் அம்மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #VisvaBharati University #Shiekh Hasina #Bangladesh Bhawan #NarendraModi #MamataBanarjee
வங்காளதேசம் விடுதலை போரின் போது இந்தியா மற்றும் வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேசம் பவன் என்ற பெயரில் புதிய ஆய்வகம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் சிந்திரி பகுதிக்கு பயணம் செய்யும் மோடி அங்கு அங்கு சிந்திரி உரம் தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை, தியோகர் விமான நிலைய விரிவாக்க திட்டம், பட்ராடு அனல் மின் நிலையம், ராஞ்சியில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் அம்மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #VisvaBharati University #Shiekh Hasina #Bangladesh Bhawan #NarendraModi #MamataBanarjee
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X