search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம் அறிமுகம்
    X

    ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம் அறிமுகம்

    சைபர் பாதுகாப்பு எனும் புதிய பாடதிட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் இன்று அறிமுகம் செய்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    ஐதராபாத் :

    ஐதராபாத் பல்கலைக்கழகம் தகவல் பாதுகாப்புடன் கூடிய ”சைபர் பாதுகாப்பு” எனும் முதுகலை பாடத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. 

    தற்போதைய 2018-19 கல்வியாண்டு முதல், இரண்டு வருடத்திற்கான சைபர் பாதுகாப்பு பாடத்திட்டதின் முழுநேர பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 2018, 2017, 2016-ஆம் ஆண்டு கேட்(GATE) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க முடியும். இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் ஒவ்வொருவருக்கும் எ.ஐ.சி.டி.ஈ-கேட்(AICTE-GATE) சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி முதல்  ஜூன் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    Next Story
    ×