search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
    X

    மே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். #PMModi #ForeignVisit






    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்படுகிறது.

    ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்கிரி-லா  உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ப்ரீத்தி சரண் கூறியுள்ளார். இதில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய தலைவர் மோடி ஆவார்.

    இந்த பயணத்தின் போது  இந்தியா - சிங்கப்பூர் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இது சிங்கப்பூருக்கு மோடி செல்வது இரண்டாவது முறையும், இந்தோனேசியாவுக்கு செல்வது முதல் முறையும் ஆகும். #PMModi #ForeignVisit
    Next Story
    ×