search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிசிடிவி கேமரா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டெல்லி ஆளுநருடன் காங். தலைவர்கள் சந்திப்பு
    X

    சிசிடிவி கேமரா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டெல்லி ஆளுநருடன் காங். தலைவர்கள் சந்திப்பு

    டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநரை சந்தித்துள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
    புதுடெல்லி :

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தினார்.

    டெல்லியில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்திற்காக விடப்பட்ட டெண்டரில் சீன நிறுவனம் பயன்பெரும் வகையில் 571 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறிவந்தது.

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அதை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் சார்பில் துணை நிலை ஆளுநரான அனில் பைஜாலை, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாகேன் தலைமையில் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

    கவர்னர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஜய் மாகேன் கூறியதாவது, “ டெல்லியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை அல்லது ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் சீன நிறுவனம் பயன்பெரும் வகையில் முழுக்க முழுக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே இதில் முடிவெடுத்துள்ளார். எனவே, மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் இந்த ஊழல் குறித்து விசாரனை நடத்த காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்படும்” என அவர் தெரிவித்தார். #CCTVscam #congress #Kejriwal
    Next Story
    ×