search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.15 கோடி சொகுசு மாளிகையில் குடியேறுகிறார் மாயாவதி
    X

    ரூ.15 கோடி சொகுசு மாளிகையில் குடியேறுகிறார் மாயாவதி

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும்,உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையில் குடியேற உள்ளார். #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தற்போது உள்ள அரசு பங்களாவிலிருந்து, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவிற்கு குடியேற உள்ளார்.
           
    உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்-மந்திரிகள் 6 பேர் அரசு மாளிகையிலிருந்து 15 நாட்களில் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் சென்ற வாரம் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மாயாவதி 2010-ம் ஆண்டில் வாங்கிய புதிய பங்களாவிற்கு மாற வேண்டும் என தனது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் விரைவில் அங்கு குடியேற உள்ளார்.


    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முலாயம் சிங் யாதவ் உட்பட பல தலைவர்கள் தங்கள் அரசு இருப்பிடங்களை காலி செய்கின்றனர்.  #Mayawati
    Next Story
    ×